படப்பிடிப்புகள் உள்பட அனைத்து திரைப்படப் பணிகளும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் நிறுத்தப்படும் என தயாரிப்பாளர் சங்கங்கள் அறிவித்துள்ளதை மறுபரிசீலனை செய்யும்படி ஃபெப்சி (FEFSI) அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி வலியுறுத்தியுள்ளார். படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டால் சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், தயாரிப்பாளர் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தொழிலாளர் அமைப்புகளுடன் தமிழக அரசு உடனடியாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் ஆர்.கே.செல்வமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
Back to Top News
Top
August 25, 2026 at 10:50 AM
படப்பிடிப்புகள் நிறுத்தம் - முடிவை பரிசீலிக்க FEFSI கோரிக்கை..!
Polimer News