ரஷ்ய மண்ணில் பிறந்த முதல் பாண்டா கரடிக்கு, சீன தூதர் முன்னிலையில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ரஷ்யா உடனான நட்புறவுக்கு அடையாளமாக, 2019ஆம் ஆண்டு ஒரு ஜோடி பாண்டா கரடிகளை ரஷ்யாவுக்கு சீனா பரிசளித்தது. 4 ஆண்டுகளுக்குப் பின் பெண் பாண்டா முதல் குட்டியை ஈன்ற நிலையில், ரஷ்யர்கள் மத்தியில் அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதன் மூன்றாவது பிறந்த நாளை முன்னிட்டு, சீனா கலச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக ஒரு வாரத்துக்கு விசேஷ நிகழ்ச்சிகளுக்கு பூங்கா நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.