விழுப்புரத்தைச் சேர்ந்த அஜித்-இளவரசி என்ற தம்பதியின் இரண்டு வயதுகூட நிரம்பாத புகழ் என்ற ஆண் குழந்தையின் மூளையில் இருந்த கட்டிக்கு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்தபோது மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதையடுத்து குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக பெற்றோர் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து, குழந்தையின் உடலுக்கு மருத்துவமனை மற்றும் அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.