சென்னை அம்பத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தங்க நகைக் கடைகளில், இந்திய தர நிர்ணய அமைப்பின்அதிகாரிகள் நடத்திய சோதனையில்BIS ஹால்மார்க் இல்லாத 1கோடியே 20 லட்சம் மதிப்பிலான 804 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட நகைக்கடைகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்பொதுமக்கள் BIS Care செயலி மூலம் HUID குறியீட்டை ஸ்கேன் செய்து, நகையின் தரச்சான்று மற்றும் அதற்கான விவரங்களை சரிபார்த்த பின்னரே தங்க நகைகளை வாங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.