கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பாலசுப்பிரமணியன் என்பவரின் இதயம், கிட்னி, சிறுகுடல், பெருங்குடல், நுரையீரல், கண் உள்ளிட்ட உறுப்புகள் குடும்பத்தாரின் அனுமதியோடு தானம் செய்யப்பட்டது. இளைஞர் உடலுக்கு சிதம்பரம் சார் ஆட்சியர் தனலட்சுமி மற்றும் புவனகிரி காவல்துறை சார்பில் மலர் வளையம் வைத்து அரசு மரியாதை அளிக்கப்பட்டது.