முதலமைச்சர் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிடும் போது, எழுந்து நின்று தொடர்ந்து குரல் எழுப்பிய திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின், அறிவிப்பு முடிந்த பின்னரும் நின்றவாறே அமளி செய்தார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ராஜ்மோகன், ஆஸ்டினை நோக்கி கையெடுத்து கும்பிட்டு அண்ணே... தயவு செய்து அமருங்கள் என கூறி தனது பேச்சை தொடங்கினார்.