நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நண்பரின் வீட்டில் பராமரிப்பிற்காக விடப்பட்ட பிட்புல் நாய் கடித்துப் பெண் படுகாயமடைந்துள்ளார். பரணி என்பவர் வெளிநாடு சென்றதால் அவருக்கு சொந்தமான பிட்புல் நாயை, அவரது நண்பர் அறிவழகன் தனது வீட்டிற்கு அழைத்து வந்து பராமரித்து வந்துள்ளார். இன்று காலை அறிவழகன் உடற்பயிற்சி கூடத்திற்குச் சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த அவரது தாயார் கவிதா என்பவரை அந்த நாய் திடீரெனக் கடித்துக் குதறியது. இந்நிலையில் அவரை மீட்டு அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், தீயணைப்புத்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள், மயக்க ஊசி செலுத்தி அந்தப் பிட்புல் நாயை பிடித்துச் சென்றனர்.