மறைந்த பிரிட்டன் இளவரசி டயானாவின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற "பழிவாங்கும் ஆடை" ((Revenge Dress)), கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக லண்டனில் உள்ள சோதேபிஸ் ((Sotheby's)) ஏல நிறுவனத்தில் பொதுமக்களின் பார்வைக்காகக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. நேற்று தொடங்கப்பட்ட இந்தக் கண்காட்சி செப்டம்பர் 24 வரை லண்டனில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து ஹாங்காங், ஜெனிவா போன்ற நகரங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு, இறுதியாக டிசம்பர் 9, 2026 அன்று நியூயார்க்கில் "பழிவாங்கும் ஆடை" ஏலம் விடப்படவுள்ளது. அப்போதைய இளவரசர் சார்லஸ் உடனான திருமணம் முறிந்தபோது டயானா சோகத்தில் மூழ்கிவிடாமல், உலகிற்குத் தனது தைரியத்தையும் அழகையும் வெளிப்படுத்திய உடையை ஊடகங்கள் "பழிவாங்கும் ஆடை" என்று வர்ணித்தன.