கரூர் அருகே தனியார் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் சென்ற கார் விபத்தில் சிக்கியதில் ஒரு மாணவரும் ஒரு மாணவியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மண்மங்கலம் அருகே வந்து கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியதில் காரை ஓட்டி வந்த மாணவர் கவுதமன் அருகில் அமர்ந்திருந்த மாணவி மது பிரியாவும் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 மாணவிகள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.