திருப்பூரில் இருந்து தாராபுரம் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த 2 கோடி ரூபாய் மதிப்பிலான பி.எம்.டபிள்யு. கார், முன்னால் சென்ற சரக்கு வாகனம் மீது மோதி நிலைதடுமாறி சென்டர் மீடியனை உடைத்துக் கொண்டு, எதிர்ப்புற சாலையில் பாய்ந்து சென்று நின்றது. சென்டர் மீடியனில் கார் மோதிய வேகத்தில், அதன் பின்புற டயர் கழன்று சுமார் 200 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டது. காரின் உள்ளே படுகாயங்களுடன் சிக்கிக் கொண்ட இருவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.