5 பேரும் தூக்கிவீசப்பட்டனர்..! 4 சிறுவர்களும், அஞ்சலையும் மதியம் 1.50 மணி அளவில், புத்தூர் கணவாய் பகுதியில் சாலையோரம் நிழலுக்கு ஒதுங்கி அங்கு அமர்ந்துள்ளனர். அப்போது, பால் கேன்களை ஏற்றிச் சென்ற டாட்டா ஏசி வாகனம் ஒன்று சாலையில் தாறுமாறாக வந்துள்ளது. இதனை கண்ட அஞ்சலையும், 4 சிறுவர்களும் சாலையோரத்தில் இருந்து இறங்கி, கீழே உள்ள பள்ளத்திற்கு சென்றனர். ஆனால், அந்த டாட்டா ஏசி வாகனம் பள்ளத்தில் இருந்த 5 பேர் மீதும் மோதியுள்ளது. இதில் அவர்கள் 5 பேரும் தூக்கிவீசப்பட்டனர். இதனை பார்த்த அப்பகுதியினர், உடனே ஓடி வந்து பார்த்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய டாட்டா ஏசி வாகனத்தை ஓட்டியவர், வாகனத்தை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. பரிதாபமாக உயிரிழந்த 4 சிறுவர்கள்..! அங்கிருந்தவர்கள், படுகாயமடைந்த நான்கு சிறார்கள் மற்றும் அஞ்சலையை மீட்டு, இரண்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே நான்கு சிறார்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த அஞ்சலைக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுபோதையில் இருந்தாரா? சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கிருந்தர்களிடம் நடந்தது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற குருந்தம்பட்டியைச் சேர்ந்த சரவணன் (27), தான் விபத்தை ஏற்படுத்திவிட்டதாக வடமதுரை காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். விசாரணையில், திருமணம் ஆகாத சரவணன், வடமதுரை பகுதியில் இயங்கி வரும் பால் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்ததும், சம்பவத்தன்று மது போதையில் இருந்த சரவணன் வாகனத்தை இயக்கி சென்றபோது, இந்த கொடூர சம்பவம் நடந்ததும் தெரியவந்தது. சரவணனை போலீசார் திண்டுக்கல் அரசு மருத்துவனைக்கு அழைத்து சென்று, அவரை பரிசோதித்தபோது, அவர் மது அருந்தியது உறுதியானதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், வடமதுரை போலீசார் சரவணனை கைது செய்தனர்.