திருச்சி திருவெறும்பூரில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஐஸ்கட்டி மீது நின்று சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. இதில் மாணவர்கள் கமலேஸ்வரன் மற்றும் ரித்விக் தனித்தனியாகவும், 53 மாணவ-மாணவிகள் இணைந்து கூட்டுச் சாதனையாகவும் சிலம்பம் சுற்றினர். மாணவர்களின் இந்த சாதனையை 'நோபல் புக் ஆப் வேல்ட் ரெக்கார்ட்ஸ்' நிறுவனம் அங்கீகரித்து சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கியது.
Back to Top News
Top
August 31, 2026 at 5:10 AM
ஐஸ்கட்டி மீது நின்று சிலம்பம் சுற்றி 3 உலக சாதனைகள் படைத்த மாணவ-மாணவிகள்..
Polimer News