தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் வெளியிட்ட அறிவிப்புகள்.. ரூ.4,800 கோடியில் மீஞ்சூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் (Desalination Plant) செயல்படுத்தப்படும். ஆவடி மாநகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க ரூ.500 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். மதுரை, கடலூர் மாநகராட்சிகள், 9 நகராட்சிகள், 20 பேரூராட்சிகளில் குடிநீர் வசதிகளை மேம்படுத்த ரூ.1,000 கோடி ஒதுக்கப்படும் பழமையான 33 கூட்டுக்குடிநீர் திட்டங்களைச் சீரமைக்க முதற்கட்டமாக 300 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும். சென்னை கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை அதிகரிக்க ரூ. 410 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும். மதுரை மாநகராட்சியில் 40 ஆண்டுகள் பழமையான பாதாள சாக்கடை அமைப்பைச் சீரமைக்க முதற்கட்டமாக ரூ.2,400 கோடியில் நடப்பாண்டில் பணிகள் மேற்கொள்ளப்படும். நாகர்கோவிலில் விடுபட்ட, புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளிலும், குன்றத்தூர், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிகளிலும் ரூ.960 கோடியில் புதிய பாதாள சாக்கடைத் திட்டங்கள். திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ.256 கோடி மதிப்பீட்டில் 9 மெகாவாட் திறன் உற்பத்தி செய்யும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும். சேலம் மாநகராட்சியில் ரூ.291 கோடியில் 10 மெகாவாட் திறன் உற்பத்தி செய்யும் வகையில் 'திடக்கழிவிலிருந்து எரிசக்தி உற்பத்தி செய்யும் திட்டங்கள் செயல்படுத்தப்படும். சாலைகளைச் சீரமைக்க, புதிய சாலைகள் அமைக்க, சென்னை உட்பட அனைத்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளிலும் ரூ.1,850 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும். பள்ளிகளைச் சுற்றி, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சாலை வசதிகள், 105 சாலை சந்திப்புகளை மேம்படுத்தும் பணிகள் ரூ.110 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். பிற மாநகராட்சிகளிலும் இதேபோன்ற மேம்பாட்டுப் பணிகள் ரூ.165 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். திருச்சி, திருப்பூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரிய பூங்காக்கள் ரூ.130 கோடி செலவிலும், மாநிலம் முழுவதும் 250 புதிய பூங்காக்கள் ரூ.175 கோடியிலும் அமைக்கப்படும். புதிய வகுப்பறைகள் கட்டுதல் மற்றும் நவீன வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகள் மொத்தம் ரூ. 335 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். சிதம்பரம் நடராஜர் திருத்தேர் விழாவை சிறப்பாக நடத்த கோயிலைச் சுற்றியுள்ள நான்கு ரத வீதிகள் சீரமைக்கப்படும். குடிநீர், பாதாள சாக்கடை, மின்சாரம், தொலைத்தொடர்பு கம்பிகளைத் தரைக்கு அடியில் கொண்டு சென்று, வீதிகளை நவீன முறையில் சீரமைக்க ரூ.36 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும். கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியை அழகுபடுத்தி, சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த ரூ. 50 கோடி செலவிடப்படும். சென்னை மாநகராட்சியில் உட்கட்டமைப்பு வசதி குறைவாக உள்ள பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி செலவிடப்படும். ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு அன்றைய தினமே Digital Driving Licence வழங்கப்படும். புதிய வாகனம் வாங்குவோர் Digital RC-ஐ இணையம் வழியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். போக்குவரத்து சம்பந்தமான அனைத்து அலுவலக சேவைகளுக்கும் "Anywhere Registration /Licensing" என்ற முறையில் வசதிகள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும். அரசு அலுவலகங்கள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ அமைப்புகள் QR code-ஐ scan செய்து மின்னணு முறையில் ஆவணங்களை சரிபார்க்க முடியும். கடந்த 2021 மே முதல் 2026 ஏப்ரல் வரை விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ். பரந்தூர் விமான நிலை எதிர்ப்பு போராட்டம், திருவண்ணாமலை சிப்காட் போராட்ட வழக்குகளும் திரும்பப்பெறப்படுகிறது.
Back to Top News
Top
September 2, 2026 at 7:59 AM
ரூ.4,800 கோடியில் மீஞ்சூரில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்: விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
Polimer News