தமிழகத்தில் அரிசி விலையை தொடர்ந்து மளிகைப் பொருட்களின் விளையும் கடுமையாக உயர்ந்துள்ளதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் கடந்த மாதம் 90 ரூபாய்க்கு விற்பனையான உளுந்தம் பருப்பு தற்போது 137 ரூபாய்க்கும்,60 ரூபாய்க்கு விற்பனையான கடலைப்பருப்பு 86 ரூபாய்க்கும், 90 ரூபாய்க்கு விற்பனையான புளி 140 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து வரும் ஆட்டா, மைதா, சர்க்கரை உள்ளிட்டவற்றின் விலையும் மூட்டைக்கு நூறு ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். அதேபோல் சூரியகாந்தி எண்ணெய் 2400 ரூபாய்க்கு விற்பனையான 15 கிலோ எடையிலான ஒரு டின் தற்போது 2600 ரூபாய்க்கு விற்பனையாகிறது.எரிபொருள் விலை உயர்வு காரணமாக விலை உயர்ந்ததாக கூறும் வணிகர்கள், வரும் மாதங்களிலும் அதிகரிக்க வாய்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Back to Top News
Top
August 1, 2026 at 7:28 AM
அரிசி விலையை தொடர்ந்து மளிகைப் பொருட்களின் விலையும் உயர்வு..!
Polimer News