சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் ஜெயங்கொண்டநிலை கிராமத்தில் 36 ஏக்கர் பரப்பளவில் குவாரி அமைக்க அனுமதி வழங்கப்பட்டுவிட்டதாகப் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் என தமிழக கனிமவளத் துறை அமைச்சர் டி.கே.பிரபு தெரிவித்தார். குவாரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்ட கிராம மக்களை அமைச்சர் நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். குவாரி அமைக்க அனுமதி கோரி மனுக்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளதாகவும், யாருக்கும் அரசு அனுமதி அளிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
Back to Top News
Top
August 1, 2026 at 8:09 AM
"ஜெயங்கொண்டநிலை கிராமத்தில் குவாரி அமைக்க அனுமதி வழங்கப்படவில்லை" - அமைச்சர் டி.கே.பிரபு
Polimer News