உலகிலேயே முதன்முறையாக, 16 வயதுக்கு உள்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு ஆஸ்திரேலியா அரசு கடந்த டிசம்பர் மாதம் தடை விதித்தது. தடை உத்தரவுக்குப் பிறகும் பத்தில் 8 பேர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது இணைய ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அன்றாட வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்துள்ள சமூக ஊடகங்களை பதின்ம வயதினர் பயன்படுத்துவதைக் கண்காணிப்பதில் உள்ள சிரமத்தை, இந்த ஆய்வு வெளிப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளின் உடல் மற்றும் மனநலத்தில் அக்கறை கொண்டு கொண்டுவரப்பட்ட இந்தத் தடைக்கான நியாயத்தை உறுதிப்படுத்திய அமைச்சர் ஆண்ட்ரூ லீ, லட்சக்கணக்கான கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், பெற்றோர்-குழந்தைகள் இடையே உரையாடல் நேரம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். 100 சதவீதம் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், தடை தொடரும் என்றும் அவர் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து இந்தோனேசியா, சீனா, பிரேசில், பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் இத்தகைய தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.