மு.க.ஸ்டாலின் தோல்வியுற்ற கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 14 வாக்குச்சாவடிகளின் வாக்கு இயந்திரங்களை மறு ஆய்வு செய்ய தி.மு.க. தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தது. இதையடுத்து வாக்கு இயந்திரங்கள் கடந்த 29ஆம் தேதி முதல் ஆய்வு செய்யப்படுகின்றன. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த என்.ஆர். இளங்கோ, கொளத்தூரில் பயன்படுத்தப்பட்ட வாக்கு இயந்திரங்களில் 2-இல் அரக்கு சீல் இல்லை என்றும் மனித தவறு என அதிகாரிகள் கூறுவதை ஏற்க முடியாது என்றும் கூறினார். இது குறித்து தெரிவித்த சென்னை மாநகர ஆணையர் சமீரன், வாக்கு எந்திரங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தார்.