கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய புகாரில் குணகலவாடி கிராம நிர்வாக அலுவலரை பணியிடை நீக்கம் செய்து திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதே கிராமத்தை சேர்ந்த ராஜகோபால் என்பவருக்கு சொந்தமான வீட்டினை பெயர் மாற்றம் செய்வதற்கு விஏஓ பொன்னுசாமி 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வீடியோ வெளியாகியிருந்தது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட நிலையில் லஞ்சம் வாங்கியது உறுதியானதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார் .
Back to Top News
Top
August 1, 2026 at 10:12 AM
வீட்டிற்கு பெயர் மாற்றம் செய்ய குணகலவாடி VAO ரூ.20,000 லஞ்சம் வாங்கியதாக புகார்..!
Polimer News