தமிழகத்தில் காவிரி ஆறு நுழையும் பிலிகுண்டுலு பகுதியைப் பார்வையிட்ட எம்.எல்.ஏ.வும், தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த், காவிரி பொங்கிப் பாய வேண்டும் என வழிபாடு நடத்தினார். மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தேமுதிக சார்பில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பிரேமலதா விஜயகாந்த், கட்சி நிர்வாகிகளுடன் பிலிகுண்டுலுவுக்குச் சென்றார். அங்கு பிளாஸ்டிக் பாட்டிலில் காவிரி நீரை எடுத்து வர வைத்து அனைவர் மீதும் தெளித்ததுடன் தம் மீதும் தெளித்துக் கொண்டு காவிரியை வழிபட்டார்.