அண்மையில், ஜப்பான் ஓபன் பேட்மிண்டனில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்தினருடன் சுப்ரபாத சேவையில் கலந்துகொண்டார். தரிசனத்துக்குப் பிறகு அவருக்கு தேவஸ்தானம் சார்பில், தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தமிழக சட்டமன்றத்தில், ஆகஸ்ட் 6-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், வேளாண் அமைச்சர் ஆர்.வினோத், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபாடு மேற்கொண்டார்.