அமெரிக்கா மற்றும் ஈரான் பரஸ்பர தாக்குதலால் மேற்காசியா பிராந்தியத்தில் மீண்டும் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இரண்டு மாதங்களாக போர் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் இரண்டு எண்ணெய் டேங்கர் கப்பல்களை ஈரான் தாக்கியதைத் தொடர்ந்து அமெரிக்கா தனது பதில் தாக்குதலைத் தொடங்கியது. ஈரானில் உள்ள முக்கியக் கட்டமைப்புகள் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. ஈரான் மீதான தாக்குதல்களுக்கு அமெரிக்கா வருந்த நேரிடும் எனக் குறிப்பிட்ட ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை, ஜோர்டான், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. ஈரான் செலுத்திய 13 ஏவுகணைகளில் 10 ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக ஜோர்டான் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஈரான் தாக்கினால் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக குவைத் தெரிவித்துள்ளது. ஈரான் தனது தாக்குதலைத் தொடர்ந்தால், அதற்குப் பதிலடியாக மிகத் தீவிரமான தாக்குதலை அமெரிக்க ராணுவம் மேற்கொள்ளும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.