பழனி தண்டாயுதபாணி மடத்துக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள மோசடியாக விற்கப்பட்டது தொடர்பான வழக்கில், பழனி முருகன் கோவில் முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்து, ஓய்வுபெற்ற தாசில்தார் மாரியப்பன், கிராம நிர்வாக அதிகாரி சின்னச்சாமி, அறநிலையத் துறை ஆய்வாளர் சிவநேசன் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் ஆறரை மணிநேரமாக விசாரணை நடத்தினர். மோசடிக்கு உள்ளான நிலம் குறித்து 1880-ஆம் ஆண்டுக்குப் பிறகான அனைத்து ஆவணங்களையும் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக, முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்து தெரிவித்தார்.