கனடாவின் ஒன்டாரியோவில் நயாகரா அருவிப் பகுதியில் உள்ள மரைன்லேண்ட் கடல் பூங்காவில் இருந்து நான்கு பெலூகா திமிங்கிலங்கள், அமெரிக்காவில் சிகாகோவில் உள்ள மீன் காட்சியகத்துக்கு பாதுகாப்பாகக் கொண்டுவரப்பட்டன. மேலும் இரண்டு திமிங்கிலங்கள் டெக்சாசில் உள்ள சான் ஆன்டோனியோ கடல் அருங்காட்சியகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. மரைன்லேண்ட் கடல் பூங்கா மூடப்பட்டதையடுத்து, அங்கிருந்த 30 பெலூகா திமிங்கிலங்களை மீட்கும் சர்வதேச முயற்சியின் முதல்கட்டமாக ஆறு திமிங்கிலங்கள் இடமாற்றம் செய்யப்பட்டன. மீதமுள்ள திமிங்கிலங்கள், ஜார்ஜியா, சான் டியாகோ, ஸ்பெயின் ஆகிய இடங்களில் உள்ள கடல் அருங்காட்சியகங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.