தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் 2 ஆயிரத்து 233 ஏக்கர் பரப்பளவில் இஸ்ரோ சார்பில் நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான கட்டுமான பணிகள் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில், தற்போது சுற்றுச்சுவர் மற்றும் கருங்கற்களால் வேலி அமைக்கும் பணி முழுமையாக நிறைவடைந்துள்ளது. ராக்கெட் லான்சிங் பேட், ஹெலிபேட், இஸ்ரோ லான்ச் காம்ப்ளக்ஸ் போன்றவற்றை அமைக்கும் பணிகள் நிறைவடைந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ராக்கெட் ஏவுதளம் செயல்பாட்டுக்கு வரும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Back to Top News
Top
July 22, 2026 at 6:15 AM
குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் தீவிரம்..!
Polimer News