விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலக்கடலை சாகுபடி தொடங்கியுள்ளது. இந்த நிலையில் மானிய விலையிலான விதைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், காரியாபட்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். காரியாபட்டி பகுதிக்கு வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் நியமிக்கப்படாததே விதைகள் தட்டுப்பாட்டுக்கு காரணம் என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.