காஞ்சிபுரத்தில் ரைஸ் மில் உரிமையாளரின் மகனை கடத்தி 50 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் அடுத்த பாக்குப்பேட்டை பகுதியில் 3 அரிசி ஆலைகளை நடத்திவரும் ரவி என்பவரின் மகன் சுரேந்தர். பைக்கில் சென்றுகொண்டிருந்த சுரேந்தரை வழிமறித்து கடத்திய கும்பல், ரவியிடம் 50 லட்ச ரூபாய் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. ரவி உடனடியாக காவல்துறைக்குத் தகவல் அளிக்க, அவர்கள் சுரேந்தரின் செல்போன் லொகேஷனை வைத்து அந்த கும்பலை கைது செய்தனர். ரவியின் மில்களுக்கு நெல் மணிகளை சப்ளை செய்யும் சந்தான கிருஷ்ணன், ரவியிடம் அதிக பணம் புழங்குவதாக நினைத்து சுரேந்தரை கடத்தியதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.