சென்னை, தாம்பரம், ஆவடி மாநகர காவல் ஆணையகங்களுக்கு உள்ளிட்ட, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 830 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் தீயிலிட்டு அழிக்கப்பட்டன. சிங்கப்பெருமாள்கோவில் அருகே தென்மேல்பாக்கம் கிராமத்தில் காப்புக் காடுகளுக்கு இடையே உள்ள தனியாருக்குச் சொந்தமான மருத்துவக் கழிவுகள் எரியூட்டும் மையத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள்கள் அழிக்கப்பட்டன.