உயர்கல்வி பயில மாணவர்களுக்கு 7.5 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் கல்விக் கடன் மேலும் உயர்த்தப்பட உள்ளதாகவும், அது குறித்த அறிவிப்பை முதலமைச்சர் விஜய் விரைவில் வெளியிடுவார் என்றும் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் செய்தியாளர்களிடம் அவர் இதைத் தெரிவித்தார்.