சென்னை தலைமைச் செயலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு கொடுக்க வருபவர்களை போலீசார் தீவிர சோதனை நடத்திய பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர். சாதாரண தண்ணீர் பாட்டில்கள்கூட பரிசோதிக்கப்படுகின்றன. கண்ணாடி பாட்டில்கள், மருத்துவர் பரிந்துரை இல்லாத மாத்திரைகள், சென்ட் பாட்டில்கள் போன்றவற்றை தலைமைச் செயலகத வளாகத்துக்குள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள், வயதானவர்கள், நுழைவாயிலில் பரிசோதிக்கப்பட்டு பேட்டரி வாகனங்கள் மற்றும் சக்கர நாற்காலிகளில் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
Back to Top News
Top
July 17, 2026 at 8:40 AM
முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு வருபவர்களிடம் தீவிர பரிசோதனை..!
Polimer News