காஞ்சிபுரம் மாவட்ட பேரறிஞர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் 49 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு அரங்கத்தை அமைச்சர்கள் எஸ்.பி.கே.தென்னரசு, ரஞ்சித்குமார், மாவட்ட ஆட்சியர் சினேகா உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். வலை பயிற்சி கிரிக்கெட் மைதானத்தை அமைச்சர் தென்னரசு பௌலிங் போட்டு, அமைச்சர் ரஞ்சித்குமார் பேட்டிங் செய்து திறந்து வைத்து விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர்.