சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தையொட்டி, தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் சிறப்பு தூய்மைப் பணி நடைபெற்றது. தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், ரோட்டரி கிளப் தன்னார்வலர்கள், பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் இந்திய கடலோரக் காவல் படையினர் இணைந்து கடற்கரையை தூய்மைப்படுத்தினர்.