புதுக்கோட்டை மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். கெட்டுப்போன அழுகிய மீன்கள், நண்டு, இறால் உள்ளிட்டவைகள் பெட்டி, பெட்டியாக பறிமுதல் செய்யப்பட்டது. கருவாடு செய்வதற்காக கெட்டுப்போன மீன்களை ஏன் வைத்துள்ளீர்கள் என அதிகாரிகள் கூறியதால் , அவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.