968 நாட்களுக்குப் பிறகு ODI கிரிக்கெட்டுக்கு திரும்பும் ஜஸ்பிரித் பும்ரா! இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, இன்று இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் மூலம் 968 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ODI கிரிக்கெட்டில் களமிறங்க உள்ளார். பும்ரா கடைசியாக 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் விளையாடினார். அதன்பிறகு பணிச்சுமை மேலாண்மை (workload management) மற்றும் உடல்தகுதியை கருத்தில் கொண்டு அவர் எந்த ODI போட்டியிலும் பங்கேற்கவில்லை. இப்போது இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்காக இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள பும்ரா, 2027 உலகக் கோப்பைத் திட்டத்தின் முக்கிய அங்கமாக பார்க்கப்படுகிறார். அவரது வருகை இந்திய பந்துவீச்சு அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படும் பும்ராவின் மீள்வரவை ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்று வருகின்றனர். இங்கிலாந்து மண்ணில் அவரது அனுபவமும் துல்லியமான பந்துவீச்சும் இந்திய அணிக்கு முக்கிய ஆயுதமாக இருக்கும்.
Back to Top News
Top
July 14, 2026 at 6:52 AM
968 நாட்களுக்குப் பிறகு ODI கிரிக்கெட்டுக்கு திரும்பும் ஜஸ்பிரித் பும்ரா!
Polimer News