கோவை மாவட்டத்தில் மக்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் குற்றச்செயல்கள் குறித்து தெரிவிக்க 'நிழல்' என்ற QR கோடு அடிப்படையிலான நவீன பொதுப் பாதுகாப்புத் திட்டத்தை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் நிறுவப்படும் QR குறியீட்டை கைப்பேசி மூலம் ஸ்கேன் செய்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, சந்தேகத்திற்கிடமான நபர்கள், சட்டவிரோத செயல்பாடுகள் உள்ளிட்ட தகவல்களை பொதுமக்கள் நேரடியாக காவல்துறைக்கு தெரிவிக்கலாம் என காவல் கண்காணிப்பாளர் பவன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
Back to Top News
Top
July 14, 2026 at 7:48 AM
கோவை - குற்றச்செயல்கள் குறித்து புகாரளிக்க 'நிழல்' என்ற கியூஆர் கோடு திட்டம் அறிமுகம்..!
Polimer News