சென்னையைச் சேர்ந்த 12 வயது சிறுமி தாரகை ஆராதனா, தனது 5 வயது முதல் பெற்ற ஆழ்கடல் நீச்சல் பயிற்சி மூலம், கடந்த இரண்டு மாதங்களில் நீலாங்கரை முதல் பழவேற்காடு வரையிலான ஆழ்கடலில் இருந்து 7,000 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சாதனை படைத்துள்ளார். கரையில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரம் சென்று 60 அடி ஆழத்தில் கடல் கழிவுகளைச் சேகரிக்கும் அதே வேளையில், கடல் அடியில் அவர் மீன்களுடன் ஆர்வத்தோடு விளையாடும் காட்சிகள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.