பொலிவியாவில் ராணுவ முகாமில் நடந்த பயங்கர வெடி விபத்தில் சிக்கிக்கொண்ட 14 வீரர்களைத் தேடும் பணிகள் 2வது நாளாக நடைபெற்று வருகின்றன. பாதுகாப்புத் துறை அமைச்சகம் சார்பில் முகாமில் குவித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்ததில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இடிந்து தரைமட்டமான கட்டத்துக்குள் 14 வீரர்கள் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், விபத்து நடந்து 24 மணி நேரத்துக்கு மேல் ஆகியும் அவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லாததால், உறவினர்கள் வெளியே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Back to Top News
Top
September 6, 2026 at 7:54 AM
பொலிவியாவில் ராணுவ முகாமில் பயங்கர வெடிவிபத்து - 2 வீரர்கள் பலி
Polimer News