பொலிவியாவில் ராணுவ முகாமில் நடந்த பயங்கர வெடி விபத்தில் சிக்கிக்கொண்ட 14 வீரர்களைத் தேடும் பணிகள் 2வது நாளாக நடைபெற்று வருகின்றன. பாதுகாப்புத் துறை அமைச்சகம் சார்பில் முகாமில் குவித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்ததில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இடிந்து தரைமட்டமான கட்டத்துக்குள் 14 வீரர்கள் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், விபத்து நடந்து 24 மணி நேரத்துக்கு மேல் ஆகியும் அவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லாததால், உறவினர்கள் வெளியே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.