காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட உச்சநீதிமன்றத்தைஅணுகுவதே ஒரே சட்டரீதியான வழிமுறையாகும் என சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விரைவில் ஆலோசித்து அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாகவும், தமிழகத்திற்கு எதிராகவும் மத்திய அமைச்சர் கருத்து தெரிவிப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார். 2007ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதற்கே 2013ஆம் ஆண்டு வரை உச்சநீதிமன்றத்தில் நீண்டகாலம் சட்டப்போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.