அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள முன்னாள் அதிபர் ஜான் எஃப். கென்னடி கலை மையத்தை ((John F. Kennedy Center for the Performing Arts)) மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த மையத்தின் முன்பு திரண்ட பொது மக்கள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் டொனால்ட் டிரம்ப், கென்னடி மையத்தின் நிர்வாகக் குழுவின் தலைவராகத் தன்னை நியமித்துக்கொண்டு, அதன் முகப்பில் தனது பெயரைச் சேர்க்க முயற்சித்தார். ஆனால் கூட்டாட்சி அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஜே.எஃப்.கே. நினைவுச் சின்னத்தின் பெயரை மாற்றுவதற்கோ அல்லது புதிய பெயரை சேர்ப்பதற்கோ நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று கூறி, பெயர் மாற்றம் சட்டவிரோதமானது என மாவட்ட நீதிபதி தீர்ப்பளித்தார். இதனை அடுத்து நிதி நெருக்கடி மற்றும் கட்டமைப்புப் பாதுகாப்பு அபாயத்தை காரணம் காட்டி வளாகம் முழுவதையும் மூட டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.