கோவை கோனியம்மன் கோவில் உண்டியல் பண திருட்டை கண்டுபிடிக்க தவறியதாக செயல் அலுவலர் உள்ளிட்ட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் பணத்தை திருடியதாக பூசாரி உள்ளிட்ட 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் திருட்டை கண்டுபிடிக்க தவறியதாக சரக ஆய்வாளர்களான ராம்குமார், உதயகுமார், கோவில் செயல் அலுவலர் குமார், உதவி ஆணையர் உஷா நந்தினி உள்ளிட்டோரை சஸ்பெண்ட் செய்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட 4 பணியாளர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.