நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே கோட்டூர் ரோடு பகுதியில் அதிகாலையில் மின்கம்பத்தில் இருந்த மின் வயர் அறுந்து விழுந்ததில், கோலம் போட வந்த மாரியம்மாள் என்ற 80 வயது மூதாட்டி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததன் காரணமாக மின்வயர் அறுந்து விழுந்ததாக கூறப்படும் நிலையில், போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.