கொலம்பியாவில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 570-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள், கட்டடங்கள் சரிந்து விழும் காட்சிகளும் மக்கள் அலறியடித்து ஓடும் காட்சிகளும் இணையத்தில் பரவி வருகின்றன. கொலம்பியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 விமான நிலையங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. நிலநடுக்கத்தின் மையம் சாக்கோ (Chocó) மாகாணத்தில் 107 கி.மீ ஆழத்தில் பதிவாகியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாட்டின் தலைநகர் போகொடா (Bogotá) உட்பட பல நகரங்களில் பலத்த அதிர்வுகள் உணரப்பட்டன. இதில் ரிசாரால்டா (Risaralda) மாகாணம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கொலம்பியாவில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 570-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள், கட்டடங்கள் சரிந்து விழும் காட்சிகளும் மக்கள் அலறியடித்து ஓடும் காட்சிகளும் இணையத்தில் பரவி வருகின்றன. கொலம்பியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 விமான நிலையங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. நிலநடுக்கத்தின் மையம் சாக்கோ (Choc ) மாகாணத்தில் 107 கி.மீ ஆழத்தில் பதிவாகியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாட்டின் தலைநகர் போகொடா (Bogot ) உட்பட பல நகரங்களில் பலத்த அதிர்வுகள் உணரப்பட்டன. இதில் ரிசாரால்டா (Risaralda) மாகாணம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.