திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டதால் இலவச தரிசன வரிசை 2 கிலோமீட்டர் தொலைவுக்கு நீண்டது. சுமார் 18 மணி நேரம் வரை காத்திருந்து அவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று ஒரே நாளில் 81 ஆயிரம் பக்தர்கள் வருகை தந்ததாகவும், அவர்கள் 5 கோடியே 36 லட்ச ரூபாய் உண்டியல் காணிக்கை செலுத்தியதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.