ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 50 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாகப் புகார். போலி ஆவணங்கள் மூலம் நிலத்தைப் பத்திரப்பதிவு செய்ததாக தி.மு.க பகுதிச் செயலாளர் ராம்குமார் மீது வழக்குப்பதிவு. கட்டிடத்துடன் கூடிய நிலத்தை, கடந்த 2022ஆம் ஆண்டு மோசடியாகப் பதிவு செய்து கட்சி அலுவலகம் நடத்துவதாகப் புகார். குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ராம்குமாரின் மனைவி திருச்சி மாநகராட்சி வார்டு கவுன்சிலராகப் பதவி வகித்து வருகிறார்.