கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மங்களூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள வேப்பமரத்தின் கிளையில் கூடு கட்டி இருந்த தேனீக்கள் கொட்டியதால் 50க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் காயமடைந்தனர். அவர்கள் அனைவருக்கும் அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டதைத் தொடந்து மேல் சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.