காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அமைச்சர்கள் பங்கேற்கவிருந்த பயனாளிகளுக்கு குடும்ப அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு காலாவதியான பிஸ்கெட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. தகவல் தெரிந்ததும் அலுவலர்கள் விரைந்து செயல்பட்டு பழைய பிஸ்கெட் பாக்கெட்டுகளை திரும்பப் பெற்று புதிய பிஸ்கட் பாக்கெட்டுகளை வழங்கியுள்ளனர். காஞ்சிபுரத்தில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் முறையாக சோதனை நடத்தாததே இதற்குக் காரணம் என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.