பிரான்ஸ் நாட்டு தேசிய தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள போர் வீரர் நினைவிடத்தில் இரு நாடுகளின் தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. புதுச்சேரி மற்றும் சென்னைக்கான பிரான்ஸ் துணைத் தூதர் ஜீன்-பிலிப் ஹூதர், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், பிரெஞ்சு தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினர். 1789ல் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள பஸ்தி என்ற சிறைச்சாலையை மக்கள் புரட்சி மூலம் தகர்த்து, மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மக்களாட்சியை நிறுவிய இந்த நாள் பிரான்ஸ் நாட்டு தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது.
Back to Top News
Top
July 14, 2026 at 7:19 AM
புதுவை கடற்கரை சாலையில் பிரான்ஸ் நாட்டு தேசிய தினக் கொண்டாட்டம்..!
Polimer News