செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மரகதம் குமரவேல், வீதி வீதியாக பிரச்சாரம் மேற்கொண்டார். ஆதரவாளர்களுடன் வாக்கு கேட்டு சென்றபோது, சித்தாமூர் அருகே பெருங்கரணையில் உள்ள மரகத தண்டாயுதபாணி முருகர் கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட மரகத முருகர் சிலைக்கு மாலை அணிவித்து வழிபட்டார். திருட்டு போன மரகத முருகர் சிலை காவல்துறையினரால் மீட்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் மீண்டும் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.