கிளீன் கவர்மெண்ட் என்பது தான் முதல்வரின் முதலாவது நோக்கம் அதை நோக்கி தான் பயணிக்கிறோம் என சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார். மதுரை சோளங்குரணி கிராம மக்களின் 21 ஆண்டு கால கோரிக்கையான போத்தி ராஜன் வள்ளியம்மன் கோயில் பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிய நிலையில், அக்கோவில் திருவிழாவில் பங்கேற்ற அமைச்சர் இக்கருத்தை தெரிவித்தார்.