திருப்பூர் அருகே செங்கப்பள்ளியில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த லாரியின் பக்கவாட்டில் கார் மோதி உருக்குலைந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். செங்கப்பள்ளி நெடுஞ்சாலையில் அதிகாலை 5.30 மணி அளவில் விபத்து நிகழ்ந்துள்ளது. சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரியை ஓட்டுநர் ஓரமாக நிறுத்தி இருந்த போது, அவ்வழியாக வேகமாக வந்த கார், பக்கவாட்டில் மோதி சிதைந்தது. 8 பேர் காரில் பயணித்த நிலையில் 3 பேர் உயிரிழந்தனர். சாலையின் ஓரத்தில் எச்சரிக்கை விளக்குகளை எரியவிட்டபடி லாரியை ஓட்டுனர் நிறுத்திச் சென்று இருந்த நிலையில் கார் ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் கவனிக்காமல் வந்தது விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அத்தோடு விபத்து ஏற்படும் சமயத்தில் நபர் ஒருவர் திடீரென சாலையை கடந்து செல்கிறார். இதனை கவனித்த ஓட்டுனர் அதிர்ச்சியாகி காரை லாரி மீது மோதியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.