தன்மானத்தை காப்பாற்றுவதற்காக திமுக கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்தார். மதிமுக அதிகாரப்பூர்வ வார ஏடான 'சங்கொலி'-ன் 30 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் பேசிய அவர், கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்ககூடிய கட்சி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்று பாராட்டினார். 1000 கோடி வாங்கிவிட்டார்.. 1500 கோடி வாங்கிவிட்டார் வைகோ என்று சொல்கிறார்கள்... ஆனால் சல்லி காசு கூட இந்த கைகளால் தொட்டது கிடையாது என்று வைகோ தெரிவித்தார்.